Hair Growth Tips in Tamil
தலைமுடி வளர பலரும் நிறைய வழிகளில் முயற்சி செய்வர். ஆனால், முடியை வளரவைக்கிறோம் என்ற பெயரில் நிறைய கெமிக்கல் பொருட்கள் நிறைந்த ஷாம்பூ, ஹேர் மாஸ்க், ஆயில் எல்லாம் பயன்படுத்தி, அது பல நேரங்களில் முடியை பாதிக்க வாய்ப்பு அதிகம்! இதுக்கு பதிலாக நம்ம வீட்லயே இருக்கும் இயற்கை பொருட்களை கொண்டு, தலைமுடியை அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர்க்கலாம்.
இந்த பதிவில், உங்க தலைமுடியை ஆரோக்கியமாக வளர்க்க உதவும், இயற்கை முறைகள், உணவுப் பழக்க வழக்கங்கள், சரியான பராமரிப்பு, மற்றும் முடி வளர்ச்சி அதிகரிக்க புதிய வீட்டு மருத்துவ முறைகளைப் பார்ப்போம்!
முடி வளர்ச்சிக்கான முக்கியமான காரணிகள்
முடி வளர்வதற்கு சில முக்கிய காரணிகள் இருக்கின்றன. அதை சரியாக கவனித்தாலே, முடி விரைவில் வளரும்.
- உணவுப் பழக்கம் – முடியின் வேர்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கணும்.
- பராமரிப்பு முறைகள் – கெமிக்கல் ஷாம்பூ, அதிக ஹீட், தவறான ஸ்டைலிங் முறைகளை குறைக்க வேண்டும்.
- மாத்திரையாக அல்ல, உணவால் தேவையான சத்துக்களை சேர்க்கணும் – உள்புற ஆரோக்கியம் முடி வளர்ச்சிக்கு முக்கியம்.
- இயற்கை முறை – வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்துவது பாதுகாப்பானது.
முடி வளர்ச்சிக்கு உதவும் இயற்கை முறைகள்!!
முன்பே சில வழிகளை பார்த்திருப்பீங்க. இப்போது, புதிய மற்றும் அதிகம் பயனுள்ள இயற்கை முறைகளை பார்க்கலாம்!
1. தேன் மற்றும் எலுமிச்சை
தலைமுடி நல்லா வளரணும்னா, அதுக்கு தேன் ஒரு முக்கிய மூலிகை. இதுல இயற்கையான கிருமிநாசினிகள் அதிகம் இருக்கிறது.
செய்முறை
- 2 ஸ்பூன் தேன்
- 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
- 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
இதெல்லாம் கலந்து தலையில் மசாஜ் பண்ணி 30 நிமிஷம் வைக்கவும். பிறகு மிதமான சூடான நீரில் அலசலாம்.
2. வெந்தயம் & பன்னீர் ரோஜா மாஸ்க்
வெந்தயத்தில் புரதம் அதிகம் இருப்பதால், இது முடி வளர்ச்சிக்கு மிகவும் உதவக்கூடியது.
செய்முறை
- வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
- காலைல விழுது போல அரைக்கவும்.
- அதில் பன்னீர் ரோஜா நீர் (Rose Water) கலந்து, முடியில் 30 நிமிஷம் மசாஜ் செய்யவும்.
இது முடி அடர்த்தியாக வளரவும், மென்மையாகவும் வளர உதவும்.
3. கறிவேப்பிலை மற்றும் புதினா
இந்த இரண்டு மூலிகைகளும் முடியை வலுப்படுத்தவும், கருப்பாகவும் வளர்க்க உதவுகிறது.
செய்முறை
- 10-15 கறிவேப்பிலை & 10 புதினா இலைகளை அரைத்து விழுதாக்கவும்.
- 1 ஸ்பூன் நெய் சேர்த்து, முடியில் 20 நிமிஷம் வைத்து கழுவவும்.
வாரம் 2 முறை இதை செய்தால் முடி மிருதுவாகவும், அடர்த்தியாகவும் இருக்கும்.
4. வெள்ளரிக்காய் ஜூஸ் & மோர்
முடி வளர உஷ்ணத்தை குறைக்கணும். அதற்கு வெள்ளரிக்காய் ஜூஸ் & மோர் சிறந்த தீர்வு.
செய்முறை
- வெள்ளரிக்காயை அரைத்து, அதன் ஜூஸை எடுக்கவும்.
- அதில் 2 ஸ்பூன் புளிக்காத மோர் சேர்க்கவும்.
- இந்த கலவையை தலைமுடியில் 30 நிமிஷம் வைக்கவும்.
இதனால் முடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும்.
Read Also: பாலியல் நோய்கள் மற்றும் அதன் தீர்வுகள்
5. ஆலிவ் ஆயில் & அரிசி மாவு
முடி உதிர்வதை குறைத்து, வளர்ச்சி அதிகரிக்க ஆலிவ் ஆயில் & அரிசி மாவு சிறந்த ஒரு வழி.
செய்முறை
- 2 ஸ்பூன் ஆலிவ் ஆயில்
- 1 ஸ்பூன் அரிசி மாவு
- இதை கலந்து, தலைமுடிக்கு பூசி 20 நிமிஷம் வைக்கவும்.
இதனால் முடி மென்மையாகவும், நீளமாகவும் வளரும்.
முடி வளர பராமரிப்பு வழிமுறைகள்
- தினமும் அதிக தண்ணீர் குடிக்கவும்.
- அதிக நேரம் ஸ்டைலிங் டூல்ஸ் பயன்படுத்தக்கூடாது.
- சூடான நீரில் தலை கழுவாதீங்க.
- அதிக கெமிக்கல் கலந்த ஷாம்பூ தவிர்க்கவும்.
- தினமும் 5 நிமிஷம் தலை மசாஜ் செய்யவும்.
முடிவாக…
முடி வளர வேண்டுமா? இனிமே எந்தவிதமான கெமிக்கல் ஷாம்பூ, மாஸ்க், அல்லது எண்ணெய் தேட தேவை இல்லை! வீட்லயே இருக்கும் இயற்கை பொருட்கள் மூலமாக முடியை ஆரோக்கியமாக வளர்த்துக்கொள்ளலாம். உங்க முடி வளர்ச்சி மழை போல வளரணும்னா, இந்த வீட்டுக் குறிப்புகளை பின்பற்றுங்கள்!